உடன்கட்டை ஏறுதல்!

கணவனை இழந்த  பெண்கள்  உயிரோடு இருந்தால் பழியும்  பாவமும்  சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையைகொண்டும் சதி முறை கையாளப்பட்டது என்றுகூட கூறலாம்

article

காலமாற்றத்தில் பண்டிகைகள்

சடங்குகளாக உருமாற்றப்பட்ட பண்டிகைகளோடு வர்த்தக நோக்கும் உடன் சேர   பண்டிகைகள் அதனுடைய உண்மையான நிலையில் இருந்து  திரிபடைய   ஆரம்பித்துவிட்டது.

article

பொன்னி நதி பாடலின் பின்னணி தெரியுமா உங்களுக்கு ?

பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் ஆறு தசாப்தகால கனவு என்றே சொல்லலாம். இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இருபாகங்களுக்குமான படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவுபெற்று பின்னணி மெருகூட்டல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான DOLBY ATMOS ஒலிக்கலப்பு பணிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பிரபல ஒலிக்கலவை வல்லுனரான Greg Townley தலைமையில் இடம்பெற்று வருகிறது. இவர் 1917, Avengers : Endgame, Blade Runner 2049 மற்றும் Dune ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்நிலையிலே தான் படக்குழுவானது திரைப்படத்தின் முதற்பாடலை அண்மையில் வெளியிட்டது.

article

அன்னையர் ஆடல்!

அன்னையரின் முக்கியத்துவம்  வழக்கமான மகாபாரதக் கதைகளில் பெண்களின் முக்கியத்துவம் என்பது ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட அளவே இருக்கும். திரௌபதி போன்ற சில பாத்திரங்கள் தவிர்த்து ஏனைய பெண் பாத்திரங்கள், மற்ற ஆடவரின் அன்னை, மனைவி, சகோதரி என்றளவில் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படுவார்கள். ஆனால் ஜெயமோகனின் மாபெரும் நாவலான வெண்முரசு, இது வரை அறியப்படாத பாத்திரங்களை விரிவாகவும், நன்கு அறியப்பட்ட பாத்திரங்களை மிக நுணுகியும் அறியுமாறு அமைக்கப்பட்டது. எனவே இந்த பாரதக்கதையில் பெண் பாத்திரங்கள், குறிப்பாக அன்னையர்களின் முக்கியத்துவம் கனிசமானது. […]

article

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது

கலைஞரும் வழிகாட்டியுமான சிவசுப்ரமணியம் கஜேந்திரன் அவர்கள் இளம் கலைஞர்கள் தமது கலை திறன்களை கொண்டு புதியதோர் உலகத்தினை உருவாக்க முடியும் என அவர் நம்புகிறார். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக அவர் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண oustories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

video

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது:பிரதீப் சந்திரசிறி

கலைஞரும் வழிகாட்டியுமான பிரதீப் சந்திரசிறி அவர்கள் கடந்த கால அனுபவங்கள் நமது எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன, என்பதினை குறித்து தமது கலையினூடாக பல ஆய்வுகளை செய்துள்ளார். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக அவர் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண oustories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

video

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது: கோரலகெதர புஷ்பகுமார

கலைஞரும் வழிகாட்டியுமான கோரலகெதர புஷ்பகுமார அவர்கள் சமூக அரசியல் மற்று கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகளை கலை வடிவமாக வெளிப்படுத்துவதில் அதீத திறமையைக் கொண்டவர். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக அவர் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கலை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அவற்றுள் Our Stories செயற்திட்டத்தின் மூலம் நாங்கள் கையாண்ட சில வடிவங்களை காண oustories.lk எனும் இணையதளத்திற்கு பிரவேசியுங்கள்.

video

கலை, பல்வேறு பரிமாணங்களை கொண்டது

நாட்டிய கலைஞரான பந்து மனம்பெரி தனது உடலை ஒரு கலைவடிவமாக பயன்படுத்துவதில் தேர்ச்சிப்பெற்றவர். இரு வேறு தலைமுறையினருக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கென The Asia Foundation ஒழுங்கமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Our Stories செயற்திட்டத்தினூடாக பந்து அவர்கள் தமது அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

video

களவியல்: சங்ககால காதல் வாழ்க்கை

தம்மை சுற்றி நடப்பவை அனைத்தையும் கூர்ந்து அவதானித்து, அவற்றில் நிலவும் இயற்கை ஒழுக்கைக் கண்டு தெளிந்து அவற்றில் இருந்து இலக்கணம் வரையும் பண்பினைக் கொண்டிருந்த பழந்தமிழ் சமூகம் நம்முடைய மானுட வாழ்வையும் ஒவ்வொரு கட்டங்களாக வகைப்படுத்தியும், நெறிப்படுத்தியும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். தனிநபர் ரீதியிலும், குடும்ப மட்டத்திலும், சமூக அளவிலும் இரு தனியாட்கள் ஒன்றாக இணைந்து ஒரு வாழ்க்கையை முன்னெடுத்தல் என்பது இன்றியமையாத பாகமாகப் பார்க்கப்பட்டது.

article

தமிழர்களின் ஜல்லிக்கட்டு

தென் தமிழகத்தில் மாத்திரமே சிறப்பு பெற்றிருந்த ஜல்லிக்கட்டுக்காக ஏன் 2017 ஆம் ஆண்டு தமிழகமே மெரினாவில் திரண்டுவந்து போராட்டம் நடத்தியது? இதற்கு விடைகான வரலாற்றில் நாம் சங்ககாலம் வரையில் சென்று பார்க்கவேண்டும் . ஏறுதழுவுதல் , ஏறுகோள் , மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, என பெயர்களைப்பெற்ற தமிழர்களின் வீரவிளையாட்டே இது . இவ்விளையாட்டு முல்லைநில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாக பண்டைக்காலத்தில் இருந்தது . முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று மிகப்பெரிய பண்பாட்டு திருவிழாவாக பொங்கல் திருநாளையொட்டி நிகழ்த்தப்படுகின்றது.

article

End of Articles

No More Articles to Load