Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

உணவு எம் உரிமை

உணவு உரிமை என்பது 

சமூகத்திற்கும் இறையான்மைக்கும் உணவு மிக முக்கியமானதாகும்.

உணவு உரிமை என்பது பசியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல. அது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாட்களை  அவர்களின் உணவு மூலமாக ஒற்றுமையாக அனுபவிக்க வேண்டிய உரிமையாகும்.  

உணவு பழக்கங்களின் மூலமாக மக்கள் அவர்களின் சமூக அரசியல் கட்டமைப்புகளை  உருவாக்குகின்றனர். மக்கள் எவ்வாறு அவர்களின் நில தொடர்புகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு உணவை மையப்படுத்தப்படுகின்றது. அதனால் இறையான்மை எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது என்பது பிரதானமான கூறாகும். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் சுற்றுச்சூழல்களை ஒன்றோடொன்று பிணைப்பதற்கு உணவு ஒரு மையமாக இருக்கின்றது.

கொள்கை அடிப்படையில், உணவு உரிமை என்பது ஒவ்வொருவருக்குமான போதிய அளவு உணவு மற்றும் அவை பெற்றுக்கொள்ள கூடியதாகவும் கிடைக்கக்கூடியதாகவும் அனுகக்கூடியதாகவும் இருக்க வேண்டியதாகும்.

போதுமானதாக (Adequate)

மக்களின்களின் குறிப்பிட்ட நிலைமைகளின் அடிப்படையில் கலாச்சார, போசாக்கு, சமூக மற்றும் சூழலியல் ரீதியாக பொருத்தமான உணவு எது என்பதை தங்களுக்குள் வரையறுக்க மக்களுக்கு உரிமை உண்டு. அதாவது, “நல்ல உணவு” என்றால் என்ன என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும், இதில் எந்த உணவு(கள்) அவசியமாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை உட்பட. தற்போதுள்ள கோரிக்கையையும்(உணவானது மனித உரிமை) நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது, மேலும் எதிர்கால சந்ததியினருக்கும் தாராளமாக உணவு இருக்க வேண்டும்.

Image Credit Developmentnews.in

கிடைக்கக்கூடியதாக (Available)

நல்ல உணவு கிடைக்க வேண்டுமென்றால், மக்கள் எப்போதும் நம்பகமான உணவு ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். கிடைக்கும் தன்மை என்பது நிலம் அல்லது பிற இயற்கை வளங்களுடன் இணைந்து பணியாற்றுவதிலிருந்து நேரடியாக உணவளிப்பதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. எனவே, நிலம் மற்றும் பிற இயற்கை வளங்களை மக்கள் அணுகுவதை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். சந்தைகளிலும் கடைகளிலும் உணவு விற்பனைக்கு கிடைக்க வேண்டும். ஆகையால், கிடைப்பதற்கு நன்கு செயல்படும் விநியோகம், செயலாக்கம் மற்றும் சந்தை அமைப்புகள் தேவை, அவை தேவைக்கு ஏற்ப, உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து உணவை தேவைப்படும் இடத்திற்கு நகர்த்த முடியும். இந்த சந்தர்ப்பங்களில், சந்தைகள் நியாயமானவை, நிலையானவை மற்றும் போட்டித்தன்மை வாய்ந்தவை என்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, தேசிய மற்றும் உலகளாவிய சந்தை சக்தி ஒரு சிலரின் கைகளில் குவிக்கப்படக்கூடாது. 

உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான திறவுகோல், அனைத்து துறைகளிலும், நீர்வழிகள், தொழிற்சாலைகள் மற்றும் சமையலறைகளில் உள்ள தொழிலாளர்கள் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளைக் கொண்டிருக்க வேண்டும். COVID -19 தொற்றுநோய் மக்கள் பசி நெருக்கடியின் விளிம்பில் இருப்பதற்கு ஒரு காரணம், அத்தியாவசிய உணவுத் தொழிலாளர்கள் தங்கள் உடல் நலத்தை ஆபத்தில் வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களின் முதலாளிகள் பாதுகாப்பான பணியிடங்களை வழங்கவில்லை மற்றும் தொற்றுநோய்களின் போது அரசாங்கம் போதுமான ஆதரவை வழங்கவில்லை. ஆரோக்கியமான தொழிலாளர்கள் இல்லாமல், உலகில் ஒரு நிலையான மற்றும் கிடைக்கக்கூடிய உணவு வழங்கல் இருக்க முடியாது.

அணுகக்கூடியதாக (Accessible)

அனைவருக்கும் உணவு எப்போதும் பொருளாதார ரீதியாக அணுகக்கூடியதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இதன் பொருள் மக்கள் எப்போதும் ஒரு நல்ல உணவைப் பெற முடியும், இது இலவச பாடசாலை உணவு, நியாயமான சந்தைகள் அல்லது ஒரு சமூக அமைப்பு மூலம் நிறைவேற்றப்படலாம், மக்களுக்கு வீட்டில் சமைக்கவும் அவர்களின் சமூகங்களுக்கு உணவளிக்கவும் தேவையான நேரமும் வளமும் இருப்பதை உறுதிசெய்கிறது.

உணவும் உடல் ரீதியாக அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். இதன் பொருள் ஒரு நபரின் உடல் திறன்கள், உடல்நிலை, சட்ட நிலை அல்லது வீட்டு நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், போதுமான உணவைப் பெறுவதற்கோ அல்லது செய்வதற்கோ மக்களின் தற்சார்பு திறனை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும்.

Image Credit – NDTV.com 

அரசாங்கத்தின் கடமைகள் மற்றும் உலகளாவிய பொறுப்புக்கூறல்

ஒவ்வொருவரின் மனித உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிப்பதை உறுதி செய்வதற்காக, கூட்டாகவும், ஒற்றுமையுடனும் செயல்பட அரசுகள்  கடமைப்பட்டுள்ளன. பொது நிறுவனங்கள் (சர்வதேச மற்றும் உள்நாட்டு) மற்றும் தனியார் நிறுவனங்கள்  தாங்கள் பணியாற்றும் மற்றும் சார்ந்து இருக்கும் மக்களுக்கு பகிரங்கமாக பொறுப்புக்கூற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது இதில் அடங்கும். “உணவுப் பாதுகாப்பு” என்பது சட்டபூர்வமான கடமைகளை வழங்குவதில்லை. மற்றும் உணவுக்கான உரிமையை விட ஒரு குறுகிய வட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு கிடைப்பதையும்  மற்றும் அணுகுவதையும்  மட்டுமே குறிக்கிறது. இது அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உணவுப் பாதுகாப்புக் கொள்கைகள் பெரும்பாலும் மக்கள் வாழவும் உயிர்வாழவும் தேவையான அளவு உணவை வைத்திருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகின்றன (அதாவது, வாழ்வாதாரம்).

போதுமான ஒரு பரந்த வரையறையைச் சேர்ப்பதன் மூலம், உணவுக்கான உரிமைக்கு மக்கள் எப்போதும் கண்ணியத்துடன் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இங்கு முக்கியத்துவம் என்பது வாழ்வாதாரம் மட்டுமல்ல, ஊட்டச்சத்துமிகுந்த உணவினை பெற்றுகொள்வதும் முக்கியமானதாகும்

உணவு என்பது மக்களை உடல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் வலிமையாக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த வகையில், உணவுக்கான உரிமை என்பது உணவுப் பாதுகாப்பின் பெரும்பாலும் தொழில்நுட்ப மொழியால் உட்படுத்தப்படவோ அல்லது பதிலளிக்கவோ முடியாத உணவை நாம் உற்பத்தி செய்வது, விநியோகிப்பது மற்றும் உட்கொள்வது பற்றிய அடிப்படையில் அரசியல் கேள்விகளை கொண்டுள்ளது.

மொத்தத்தில், தங்கள் சமூகத்திற்கு போதுமான உணவு எது என்பதை வரையறுக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு; அனைத்து தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கும் – பொருளாதார நிறுவனங்கள் உட்பட – எல்லா மக்களுக்கும் எப்போதும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை

 உள்ளது.

Image Credit – FAO- Oliver Asselin

உலக உணவு தினம் பற்றி..

உலக உணவு தினம்  ஆண்டுதோரும் அக்டோபர் 16 ஆம் திகதி உலகம் முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகின்றது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு இத்தினத்தினை அறிவித்தது.  நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ராகுலன் உதயநாயகி கந்தசாமி

Cover image credit - landtimes.landpedia.org

Related Articles