Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சீனக் கலாச்சாரத்தில் பௌத்த மதத்தின் தாக்கம்

பௌத்தம் என்றால் புத்தம், புத்தர் மற்றும் அறிவு என பொருள்படும். பௌத்தம் என்றால் எழுச்சியின் தத்துவமே.பெளத்த மதம் சீன கலாச்சாரத்தில் இணைவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் எடுத்துக் கொண்டது. பெளத்த மதம் கி.மு.566-468 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சித்தார்த்த கௌதமர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மதம் இவரது சொந்த முயற்சியாலும் அனுப்பவத்தாலும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் உலக வாழ்வில் உள்ள இன்பங்களை வெறுத்து நிலையாமை குறித்த பற்றுகளை நீக்கி துறவறம் மேற்கொண்டு புத்த ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது மற்றும் இவருடைய தத்துவங்கள் மிக உயர்த்த கோட்பாடுகளை உள்ளடக்கியது. இந்த தத்துவங்கள் இவரது சீடர்களால் பரப்பட்டது.  புத்த மதம் தன்னுடைய இயங்குவியலற்ற தன்மையால் உலகமெங்கும் பெயர் சொல்லும்படியான பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ பெளத்தத்தால் ஸ்தாபிக்க இயலவில்லை.வேறொரு பண்பாட்டின் மீது வீரியமான தாக்கத்தை ஏற்படுத்துமளவு வலிமை கொண்டதாக மாறவும் இயலவில்லை.பெளத்தம் சென்றடைந்த நாடுகளில் ஒழுக்கவாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான்! எனினும் அந்நாடுகளின் சமூக அமைப்பையோ அரசியல் அமைப்பையோ பெளத்தம் மாற்றி அமைக்கவில்லை. அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை.

படம்: pixabay

புத்தமதத்தின் வெற்றிகளின் முக்கிய சக்திகளில் ஒன்று தாவோயிசம். புத்தமத புராணக் கருத்துக்களை சீன மொழிகளுக்கு உதவுவதற்காக, புத்த மதத்தினர் சீன மொழியில் தாவோயிசத்திலிருந்து கருத்துக்களை கடன் வாங்கினர். பௌத்தமும் தாவோயிசமும் இந்த பரிமாற்றத்திலிருந்து பயனடைந்தன. தாவோயிஸ்டுகள் தங்கள் கருத்துக்களை விரிவாக்கினர். பௌத்தர்கள் தங்கள் பாரம்பரியத்தை கற்பிப்பதை எளிதாக்கிய ஒரு சொல் கிடைத்தது.

காலப்போக்கில் பெளத்த மதம் சீன மக்களின் வாழ்க்கையில் ஒரு பிரபலமான சக்தியாக மாறியது. உண்மையில், ஆறாவது நூற்றாண்டில், பௌத்த மதம் பிரபலமாகவும் அரசியல் செல்வாக்கிலும் தாவோயிசத்தை எதிர்த்தது. இந்த சமயத்தில், அடுத்த மூன்று நூற்றாண்டுகளில், சீன பௌத்த மதத்தின் முக்கிய பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இன்று தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் இரண்டு பள்ளிகள் தூய்மையான நிலப்பகுதி புத்தமதம் மற்றும் சான் (ஜென்) புத்தமதம் ஆகும். பல அறிஞர்கள் பௌத்தத்தை பல புத்தகங்கள் என்று கருதுகின்றனர். சீனாவில் பௌத்த சமயத்தில் (டங் வம்சம், 618-907 CE) என்று அழைக்கப்படும் கிளாசிக்கல் காலத்தில், பல தத்துவங்கள் மற்றும் தியான நடைமுறைகளை கற்பித்தும், ஊக்குவித்தும் பல புத்தகங்கள் இருந்தன. உதாரணமாக, ஹுயேன் மற்றும் தியானா பள்ளிகள், தத்துவம், இடம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றில் மாறுபட்டிருந்தது.

படம்: pixabay

சீன பெளத்தத்தில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரான போதிசத்துவா கன்யன் (உலக குவாஷிஹின் என்ற கசப்புணர்வை உணரும் ஒருவர்) உலகின் துன்பங்களுக்கு உதவுபவர் இந்திய புத்தமதத்திலிருந்து வந்தவர், குவைன் சீன பௌத்தர்கள் மற்றும் தாவோஸ்ட்டுகளின் பக்தி நடைமுறைகளில் ஒரு முக்கிய உருவமாக மாறியிருந்தார்.

உலகின் பல்வேறு இடங்களுக்கும் பௌத்தமதம்  பரவியுள்ளது. மத்திய ஆசியா நாடுகளிலும் கிழக்காசிய நாடுகளிலும் பௌத்தமதம் பெருமளவு பரவியது. ஆனால் ஏதேனும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்கள் பௌத்தம் ஏற்படுத்தியுள்ளது என்றோ சாதனை ஒன்றுமேனும் ஏற்படுத்தியுள்ளது என்றோ வரலாறு நெடுக தேடிப்பார்த்தாலும் கூடக்கிடைக்காது. நேர்மாறாக வேறேதேனும் சமயத்தோடு அல்லது பண்பாட்டோடு மோதுகின்ற சூழல் எங்காவது ஏற்பட்டால் பெளத்தம் தோற்றுப் போயுள்ளதையே நாம் காண்கிறோம். பெளத்த மதம் இந்தியாவில் தோன்றியது. நீண்டகாலமாக இங்கேயே பல்கிப் பெருகியது கி.பி மூன்றாம் நூற்றாண்டில் நான்கில் மூன்று பகுதிகளிலும் அதாவது ஏறக்குறைய மூக்கால் பாகம் பெளத்தத்தையே பின்பற்றி வந்தனர். நான்காவது நூற்றாண்டில் ‘பாஹிய’ இந்தியாவிற்கு வந்த போதிலும் இங்கு மக்கள் மத்தியில் பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால் அதன்பிறகு பிரமண மதம் தலைதூக்கியபோது, கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, புனிதமான பெளத்த மதம் தூய்மையாகத் துடைத்தெறியப்பட்டது. இன்றைக்கு இவ்வளவு பெரிய நாட்டில் மிகக்குறைவான பெளத்தர்களே காணப்படுகிறார்கள். பௌத்த மதம் தமிழ்நாட்டிலும் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை தமிழ் நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளை கொண்டு அறியலாம். பௌத்த மதம் தமிழ்நாட்டில் சிறப்பு பெற்றிருந்த செய்தி

படம்: pixabay

சிலப்பதிகாரம்,மணிமேகலை,தேவாரம்,பெரியபுராணம்,நீலகேசி மற்றும் நாலாயிரதிவ்யபிரபந்தம் ஆகிய நூல்களில் அறியக்கிடக்கின்றது. பௌத்த மதம் அசோக சக்கரவர்த்தி காலத்திலே தமிழ்நாட்டில் பரவியிருந்தது. பௌத்தம் தமிழ்நாட்டிற்கு வந்த அதே சமயம் தான் வடநாட்டு மதங்களும் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்த்தன. ஆருகதம் எனப்படும் ஜையன மதமும், பிராமண மதம் என்று அழைக்கப்படும் வைதீக மதமும், பூரணன் என்றவர் வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் வடநாட்டு மதங்கள் ஆகும். பெளத்த மதத்தை உண்டாக்கிய சாக்கிய புத்தரும் ஜைன மதத்தையுண்டாக்கிய வர்த்தமான மகாவீரரும், ஆசீவ மதத்தையுண்டாக்கிய கோசல மக்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இந்த காலத்தில் வைதீக மதமும் நடைமுறையில் இருந்தது. இந்த நான்கு மதங்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்தன. வடநாட்டு மதங்களின் தொடர்பற்ற புராதன மதமாக இருந்தது அக்காலத்துத் தமிழர்கள் மதம். வடநாட்டினின்று தென்னாட்டு பெயர்ந்துள்ள நான்கு மதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கையுடையவை. இறுதியில் பௌத்தமே நிலையாக இருந்தது எனினும் அது பொதுமங்களாலும் அரசர்களாலும் செல்வரால் வழங்கப்பட்டிருந்த செல்வத்தை பார்த்து பௌத்த பிக்ஷ்க்கள் தங்கள் கடமைகளை மறந்து, செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கி விட்டனர். இதனால் இம்மதம் மக்கள் செல்வாக்கை இழந்து தமிழ்நாட்டில் பிறமதங்களுடன் போரிடமுடியாமல் விழ்ச்சியை தழுவியது.

அவ்வாறே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காபூலினுடைய மன்னர் மீனாந்தர் பெளத்தத்தைத் தழுவியிருந்தார். ஆனால் ஆல்க்கானில் இஸ்லாம் அடியெடுத்து வைத்ததும் ஒரு கணமும் அதை எதிர்கொள்ள பௌத்தத்தால் முடியவில்லை. தாவோயிசம் உடைய ஒத்துழைப்பு உதவியின் கருணையினால் சீனாவில் பெளத்தம் பரவியது .இல்லையேல் கன்பூசியியஸின் சமயநெறி அதை ஒழித்தே விட்டிருக்கும். எவ்விடத்திலும் அரசமைப்பையோ சீரழிந்துபோன சமூக அமைப்பையோ எதிர்த்து பெளத்தம் குரல் கொடுத்ததே கிடையாது. அரசியலுக்கு பெளத்தத்தில் இடமே கிடையாது. அரசை மாற்றும் முயற்சிகளுக்குப் பதிலாக, நல்ல அரசோ தீய அரசோ அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று பெளத்தம் போதிக்கப்படும். தீய சக்திகளுக்கு எதிராக வாய் திறவாது கட்டுப்பட வேண்டும் என்ற போதனைகளின் காரணமாக என்ன கொடுமைப்படுத்தப்பட்டாலும் பௌத்தர்கள் அதை எதிர்த்து பெருமூச்சு கூட விட்டதில்லை. மற்ற பிறவிகளில் செய்த தீமைகளின் விளைவுகள் இப்போது துன்பங்கள் தொடர்கின்றன என்று எண்ணி அவர்கள் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்று கருதுவர். (நூல்: புத்தர் மற்றும் அவரது மதம். பி .150,151.)

ஒரு தீய அரசுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? இத்தகைய சமயங்களை அந்த அரசுகள் போற்றவல்லவா வேண்டும்.  தாங்கள் செய்யும் தீமைகளுக்கு அவர்கள் எதிர்த்து முனகக் கூடமாட்டார்கள் என்பதால், அரசுகள் பெளத்தத்தை வரவேற்கிறது அதே நேரத்தில், தடை செய்யாமல் கொடுமைகளை புரிந்தும் லஞ்சாலாவண்ய நிர்வாகத்தைத் தொடர்கின்றன.

பௌத்த மதம் பரவத்துவங்கிய உடனே மகத நாட்டு மன்னன் பீமபஸாரன் பௌத்தத்தைத் தழுவினார். பௌத்தத்துக்கு ஆதரவாக அரசாங்க ஆணையமும் வெளியிட்டார் .தொடர்ந்து அவரது மகன் அஜித சத்ருவும் பௌத்தத்தின் தீவிர ஆதரவாளராக மாறினார். கோசல நாட்டு மன்னர் அக்னிதத்தன் அவர் வலிச் சென்று தனது நாட்டில் பெளத்தத்தை வரவேற்றார்.

படம்: pixabay

இந்தியாவில் அல்லாமல் திபெத், மங்கோலியா நாடுகளில் கிப்லாய் கான் பௌத்தத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். பெளத்தம் பரவுவது அரசியல்ரீதியாக தனக்கு நன்று என்று அவர் உணர்ந்தார்.

பெளத்த மதம் முக்கியமாக ஆசியாவில் பின்பற்றப்பட்டாலும், இந்த பெளத்த மதம் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. (350-550 மில்லியன் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாக பரவி வரும் சமயங்களில் பெளத்தமும் ஒன்றாக உள்ளது.

References:

Related Articles