இலங்கையர்களின் கதிர்காமம்

தமிழர்களுக்கோ தனிப் பெருங் கடவுள், முருகன்! தமிழ்மொழியை உலகுக்கு அளித்தவனென முருகன் போற்றப்படுகின்றான். தமிழர்களின் பழம்பெரும் வழிபாடாக வேல் வழிபாடு இருந்து வருகின்றது. முருகனின் மூல ஆயுதமான வேலை, அவனாகவே கண்டு தொழுதலே, வேல் வழிபாடாகும். இன்று தமிழ்நாட்டில் அருகிவிட்ட அந்த தனிப்பெரும் வழிபாடு இலங்கையின் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் ஆன்மீகத்தில் முருகனுக்கே எப்போதும் முதன்மை இடமுண்டு.