Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அமேரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலும் நொஸ்ட்ராடம்ஸ் எனும் தீர்க்கதரிசியும்

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினோராம் திகதி சரியாக மணி காலை 8.46. அமெரிக்கா எனும் உலகின் மிகப்பெரிய வல்லரசு தேசத்தின் தோற்றமே மாறிப்போன தருணம் அது.

மணிக்கு சில நூறு மைல்கள் வேகத்தில் ஒரு விமானம் பறந்து வந்தது. அது தாங்கிவந்த எரிபொருளின் நிலை சுமார் பத்தாயிரம் கலன்கள் இருக்கும். அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது, வந்த வேகத்திலேயே மோதியது, பத்தாயிரம் கலன்கள் எரிபொருளைத் தாங்கிவந்த அந்த விமானம். இது முதல் விமான மோதல்.

அமெரிக்க உலக வர்த்தக மையத்தில் மோதிய முதல் விமானம் 
பட உதவி : pinterest.com

இனி இரண்டாவது, அது குறிவைத்ததோ தெற்கு கோபுரத்தை. சரியாக மணி 9.03 இருக்கும். அந்த விமானம், வந்த வேகத்தில் தெற்கு கோபுரத்தை மோதி தகர்த்தது. இவ்விரு விமானங்களும் வந்து மோதிய வேகத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியே புகைமூட்டமாகக் காணப்பட்டது.

விமானங்கள் மோதி அதனால் ஏற்பட்ட சேதத்தில் இரு கோபுரங்களும் இருந்த இடம்தெரியாமல் உதிர்ந்து விழ ஆரம்பித்து விட்டன. அதுவும் கொஞ்ச நேரத்திலேயே தரைமட்டமாக்கப்பட்டு விட்டன.

அமெரிக்க உலக வர்த்தக மையத்தில் தெற்கு கோபுரத்தில் மோதிய
இரண்டாவது விமானம் 
பட உதவி : news.com.au

இரு கோபுரங்களிலிருந்தும் இரும்பு, கண்ணாடி மற்றும் மனித உடல்கள் சாம்பல் சாம்பலாக மொத்த மொத்தமாகவே எரிந்து கிழே விழுந்தன.

அடுத்து அதே தினம் காலை 9.37 மணிக்கு மூன்றாவதாக ஒரு விமானம் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சீறி வந்து மோதியது.

அடுத்தது நான்காவது விமானம். 

இது தன் இலக்கை தவறிவிட்டு விட்டது. சரியாக காலை 10.03 மணி இருக்கும் தெற்கு பென்சில்வேனியாவில் வயல்வெளியில் விழுந்து நொறுங்கிப்போனது.

பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கிய 4வது விமானம்
பட உதவி : twitter.com

உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரம் மீது விமானத்தினால் தாக்கப்பட்டதால் உயிரிச் சேதம் மட்டும் 2600 பேர் வரை… பெண்டகன் தாக்குதலில் 125 பேர்வரை இறந்தார்கள். மொத்தமாக கடத்தப்பட்டது நான்கு விமானங்கள், இந்த நான்கு விமானங்களிலும் இருந்த மொத்த பயணிகள் 256 பேர். அத்தனைப் பயணிகளும் இறந்தே போனார்கள்.

இவ்வளவு பெரிய சோகத்தை அமெரிக்காவுக்கு தந்தது யார் என்று தேடிய அமெரிக்காவுக்கு அதைக் கண்டு பிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. சம்பவம் நடந்த இருபத்தி நான்கு மத்தியாளத்திற்குள் யார் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள் என்கின்ற முடிவுக்கு வருவதற்கு இரண்டு தரப்பில் மட்டுமே அவர்கள் ஆராய்ந்தார்கள்.

முதலாவது அல்கொய்தா! இரண்டாவது ஈராக் அரசு!

இந்தளவு பிரம்மாண்டமான தாக்குதலை அதுவும் அமெரிக்க விமானங்களைக் கடத்தி அமெரிக்காவுக்கே அடிப்பதென்பது சாதாரண விடயமா என்ன? அதனால் இந்த பலம் ஈராக்கிற்கு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது அமெரிக்கா. 

அப்போ வேறு யார்? இந்த பிரம்மாண்ட திட்டத்தை செயற்படுத்தும் அளவுக்கு ஒசாமா பிிலேடனின் அல்கொய்தா இயக்கத்தைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை அமெரிக்கா அறிந்தே வைத்திருந்தது. காரணம் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை தவிர அத்தனைப் பெரிய நெட்வேர்க்கும் பணபலமும் வேறு யாருக்கும் கிடையாது என்பது அமெரிக்கா நன்கே தெரிந்த ஒன்று.

அமெரிக்கா வளர்த்த கடா இல்லையா, அல்கொய்தா… அவர்களுக்கு தெரியாதா வளர்தத கடாவின் பலமும் பலவீனமும். அதேநேரத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்குவது என்பதில் ஒசாமா பின்லேடனுக்கு மட்டும்தான் முன் அனுபவம் உண்டு என்பதும் அவர்களுக்குத் தெரியும். 

கென்யாவிலும் அதே நேரம் தான்ஸானியாவிலும் ஒரே நேரத்தில் அமெரிக்கத் தூதரங்களைத் தாக்கியது மட்டுமல்லாமல் ஒரே சமயத்தில் பன்னிரெண்டு அமெரிக்க விமானங்களைத் தாக்க திட்டம் தீட்டியது வரை, மிகப்பெரிய சம்பவங்களை செய்தும் செய்ய திட்டமிட்டதும் ஒசாமாவின் அல்கொய்தா மட்டும்தான் என்பதுதான் அந்த முன் அனுபவம்.

செப்டெம்பர் 11 தாக்குதல் என்பது அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சிதான்.

அதில் எள்ளளவிற்கேனும் சந்தேகமில்லை. ஆனால் வியந்து நிற்கும் அளவுக்கு அமெரிக்கா அதை எதிர்பார்க்காத ஒரு விடயமும் அல்ல! வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்று ஊடங்கள் சொன்னது. கடாவை வளர்த்துவிட்டவர்களே மார்பில் பாய்ந்தார்களே என்று அல்கொய்தா தரப்பு சொன்னது.

இந்தத் தாக்குதல் நடந்து எதிர்வரும் 2019 செப்டெம்பர் 11ஆம் திகதியுடன் 18 வருடங்கள் ஆகின்றன. யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத  அளவிற்கொரு திட்டத்தை தீட்டி அதை நடத்தி காட்டிய அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும் அமெரிக்கா கொன்று 8 வருடங்கள் ஆகின்றன.

18 வருடங்கள் கழித்து இந்தத் தாக்குதலைப் பற்றி பேசவேண்டிய தேவை என்ன?

இப்படியொரு சம்பவத்தை இந்தக் காலட்டத்தில் இந்த நகரில் இந்தக் கட்டிடத்தின் மீது நடக்கும், தாக்குதல் தீவீரவாதத் தலைவர் நடத்துவான் என்று 600 வருடங்களுக்கு முன்னே ஆரூடம் கூறப்பட்டு விட்டது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

அந்த ஆரூடத்தைப் பற்றித்தான் நாம் இனி பார்க்கப்போகின்றோம்…

உலகில் பல தீர்க்கதரிசிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர் நொஸ்ட்ரடாம்ஸ். இவரின் பல தீர்க்கதரிசனங்கள் அவர் சொன்ன காலப்பகுத்தியில் அவர் சொன்னமாதிரியே நடந்துள்ளமைதான் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அவர் சொன்ன தீர்க்கதரிசனத்தில் நடந்த ஒன்றுதான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல். 1503ஆம் ஆண்டு தொடக்கம் 1566ஆம் ஆண்டுவரை பிரான்ஸபு நாட்டில் வாழ்ந்த மைக்கல் தி நொஸ்ட்ரடாம்ஸ் வருங்காலத்தைக் கணித்துச் சொல்லியிருக்கிறார்.அவர் கைப்பட எழுதிய அந்த நூல் இத்தாலியில் ஒரு நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நொஸ்ட்ராடம்ஸ் அவர்களின் மாதிரி ஓவியம் 
பட உதவி : adamsmith

In the year of the new century and nine months,
From the sky will come a great King of Terror…
The sky will burn at forty-five degrees.
Fire approaches the great new city…
Five and forty degrees, the sky shall burn:
To the great new city shall the fire draw nigh.
With vehemence the flames shall spread and churn
When with the Normans they conclusions try.

இதுதான் செப்டெம்பர் தாக்குதல் பற்றி நொஸ்ட்ரடாம்ஸால் எழுதப்பட்ட குறிப்பு பாடல். இது செய்யுள் வடிவில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது. பின் இதை ஆராய்ச்சியாளர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.

புதிய நூற்றாண்டின் ஒன்பதாவது மாத முடிவில்
வானத்திலிருந்து ஒரு பயங்கர ராஜா வருவான்
நாற்பத்தைந்து பாகையில் வானம் தீப்பற்றி எரியும்
பெரும் தீ புதிய கரை அணுகும்.

– இது முதல் பாடலின் செய்யுள். 

புதிய நூற்றாண்டு என்பது 21ஆம் நூற்றாண்டைக் குறிக்கும். ஒன்பதாவது மாதம் செப்டெம்பர்தான் என்பது உறுதி. பூகோள அளவில் பார்த்தால் நியூயோர்க் நாற்பது பாகை டிகிலிரியில்தான் அமைந்திருக்கிறது. வானத்திலிருந்து வந்த பயங்கர ராஜாவென அந்த விமானங்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். பெரும் தீ பற்றிக்கொண்டுதானே இரண்டு கோபுரமும் தரைமட்டமானது.

இந்தப் பதிவில் ஒரு படம் தரப்பட்டுள்ளது. அது நொஸ்ட்ரடாம்ஸால் வரையப்பட்டது. அவர் செய்யுள்களை எழுதி அதற்கேற்றாற்போல் பல ஓவியங்களையும் வரைந்திருக்கிறார். ஒரு கட்டடிம் எரிவது போன்று வரையப்பட்டது அந்த ஓவியம்.

600 வருடங்களுக்கு முன் நொஸ்ட்ரடாம்ஸ் வரைந்த ஓவியமும், 2001 ஆம் ஆண்டு தாக்குதலின் பொது படம் பிடிக்கப்பட்ட அமெரிக்க உலக வர்த்தக மையமும்.

இதுதான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக நோஸ்ட்ராடமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகின்றது.

இது தொடர்பான அவரது குறிப்பிலும்… ஒரு புதிய நகரத்தை விண்ணிலிருந்து வரும் இயந்திரப் பறவைகள் தாக்கியழிக்கும் எனும் பொருள்பட எழுதியுள்ளாராம்.

அந்தப் புதிய நகரம் எனும் வார்த்தை நியூயோர்க்கை குறிப்பதாக கருதப்படுகின்றது.

இயந்திரப் பறவைகள் என்பது விமானத்தைத்தான் அவர்கள் சங்கேத பாஷையில் விவரிக்கிறார்கள்.

ஆனால் இன்னொரு குறிப்பில் விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கள் புதிய நகரை நிலை குலைய செய்யும்… என்னும் பொருள்படவும் கூறியுள்ளார்.

அதுவும் இதே சம்பவத்தை குறிப்பாதாகக் கூட இருக்கலாம். அல்லது மூன்றாவது உலக யுத்தம் நடைப்பெற்றால் அப்போது அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதனை குறிப்பதாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஒரு சம்பவத்தை வைத்து எப்படி இதை நம்புவது என்று நீங்கள் கேட்டால் இதோ இன்னும் சில சம்பவக் குறிப்புகள்.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சுற்றுக்கொலைசெய்யப்படுவார், ஆபிரகாம் லிங்கன் கொலைசெய்யப்படுவார், இந்திராகாந்தி தனது மெய்பாதுகாவலராலேயே சுடப்பட்டு கொல்லப்படுவார் என்றும் கூட அவர் எழுதி வைத்திருக்கிறார்.

பழுதான ஒரு அப்பிளினால் பெரும் சேதம் ஏற்படும். அந்த நாட்டுக்கே அது பாரதூரமான ஒரு கறையை ஏற்படுத்தும் என்றுகூட அவருடைய ஒரு செய்யுள் சொல்கிறது. 

அப்பலோ விண்கலம் வான்வெளியில் வெடித்து சிதறியதே அதைப்பற்றித்தான் இங்கே சொல்லியிருக்கிறார்.

நொஸ்ட்ராடம்ஸ் போலவே சமகாலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒருவர்தான் வங்கா பாபா.

வங்கா பாகாவும், வரும் வருடங்களில் உலகில் நடக்கவிருக்கும் சம்பவங்களை ஆண்டுகளுடன் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.

ஆம், வங்கா பாபா உலகில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கணித்து வைத்து சென்றுள்ளாராம். பல்கேரிய நாட்டைச் சேர்ந்த வங்கா பாபாவுக்கு 12 வயதிருக்கும் போது புயல் ஒன்றில் சிக்கி பல நாட்களுக்கு பின்னர் கண்களில் மண் மூடிய நிலையில் அவரது குடும்பத்தாரால் கண்டுபிடிக்கப்படார். இதனால் அவர் தன் பார்வையையும் இழந்தார்.

இந்த நிகழ்வுக்கு பின்னரே எதிர்காத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணிக்க துவங்கினார். இவர் இறப்பதற்கு முன்னர் ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்றும், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பகுதிகள் காணாமல் போகும் என கணித்திருந்தார்.

இதற்கு பிறகே அவர் பேசுபொருளாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles